Tuesday, 3 June 2014

கொசு, ஈ பூச்சிகளை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்


* கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள், வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடம்புக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
* சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டிஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்துவிட்டால் ஈ மொய்க்காது.
* வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஓன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது.
* எறும்பு பவுடர் போடும்போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணையில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது, அதிக பவுடரும் ஆகாது.
* கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வௌ¢ளைப் பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்துவிடும்.
* தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.
* விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
* பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனி ,குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிப்பட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
* தேன் கொட்டினால் கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும். 3 கிராமகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டிய இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும், சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும், வீக்கமும் மறைந்துவிடும்.
* வேப்பிளையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் வராது.
* பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொரி, சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது

No comments:

Post a Comment