பசலைக்கீரையும் முட்டையும் போதும்..!
கண் பார்வைக்கு பசலைக் கீரை போதுமுங்க..! கண் பார்வை மங்காமல் இருக்க, மாத்திரை வேண்டாம்
மருந்து வேண்டாம், அறுவை சிகிச்சை வேண்டாம் வெறும் பசலைக் கீரையும் முட்டையும் போதும். அவற்றில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த இரண்டையும் எந்த வகையில் உணவாக
சேர்த்தாலும் போதும்.
கண் பார்வை குறையவே குறையாது.
கண்ணாடி போடாமல் பேப்பர் படிக்கலாம், டி.விபார்க்கலாம்
அமெரிக்க தேசிய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கை இது..
கணையம், ஈரல் ஆற்றலை மேம்படுத்த இயற்கை உணவுகளிலிருந்து ஒரு சாறு. உடல் சருமத்திற்கும், ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கும் உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது.
தேவை:
1 டீஸ்பூன் கோதுமைப்புல் பவுடர்
3-4 பசலை கீரை இலைகள் (பாதி வேகவைத்தது)
1 நெல்லிக்காய்
1-3 வேப்பிலை இலைகள்
எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு அரைகப் தண்ணீர் சேரத்து குடிக்க வேண்டும். வேப்பிலை கசப்பை சகிக்க முடியாதவர்கள் பாகற்காயை உபயோகப்படுத்தலாம். தினமும் ஒரு ஷாட் (44 ml / 1.5 அவுன்ஸ்) குடிக்கலாம்.
/இயற்கை உணவு மருத்துவர் இந்திரானி கோஷ் பிஜ்லானி/
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!
அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்னையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.
தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்னையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.
ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.
No comments:
Post a Comment