தேவையான பொருட்கள் :
இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10 - 15
பூண்டு - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
மிளகு - 1 - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கறி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
மிளகாய் வற்றல் - 2
பட்டை, லவங்கம், ஏலக்காய் - சிறிது
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
தேங்காய் பால் - அரை கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை :
இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் தடவி வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்து கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் மிளகாய் வற்றல் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பிறகு தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போகக் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் இறாலைச் சேர்த்து பிரட்டி வேகவிடவும்.
இறால் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான இறால் கறி தயார். இது சற்று காரசாரமாகவே இருக்கும். விருப்பத்திற்கேற்ப காரத்தை சரிசெய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment