Sunday, 5 January 2014

"மருத்துவரை நாடா மருத்துவம்!



கீழ்க்கண்ட மருத்துவங்களை நாமே செய்து வந்தால் நாம் மருத்துவரை நாட வேண்டிய அவசியமே வராது:

ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில், வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும்.

தாமரை இதழ்களை காய்ச்சி வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து உண்டு வர கண் குளிர்ச்சியடையும், சூடு தணியும்.

பொண்ணாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வர கண் பார்வை தெளிவு பெறும்.

ஆஸ்துமா குணமாக வில்வ இலைப் பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment